கடைசி மனிதன் - அவன் தமிழன்!

|

(ஈழ தமிழர் போரின் போது எழுதப்பட்டது...)
  1. பாண்டா கரடி குறையுது
    காண்டா மிருகம் மாயுது
    கூவும் கருணை கூட்டமே-
    அழியும் இனம் அழிய விட்டு
    அமைதியாய் இருப்பதேனோ?

  2. சாணக்கிய சூத்திரம்
    சகுனியின் சாத்திரம்
    கற்று தேர்ந்த கனவான்களே-
    சாகும் வரை சாக விட்டு - சகுனம் பார்த்து
    சாகும் வரை உண்ணாவிரதமா?

  3. இணக்கம் இல்லை என்றான் - நட்பு
    சுணக்கம் ஆனது என்றான்-
    இருந்தால் தானே இனம்
    இழிக்குமென்றெண்ணினானோ, துரோகி?

  4. எம்மால் அரியணை ஏறி
    எம்முன் ஆறுதல் கூறி - பின் சென்று
    எம்மினம் அழிபீரோ?
    ஒருவனுக்கு ஓரினம் சமமாமோ?

  5. கூரை தரையானது
    தரை பிணவறையானது!
    நிறுத்தி விட்டோம் போரென்று
    புறப்பட்டு வருவோரே-
    பிணம் தின்னி கழுகுகளோடு
    பந்தியுண்டுச் செல்லுங்கள்!

  6. படைத்தவனை விட்டு
    அடுத்தவனைச் சொல்லியெதற்கு?
    படைத்தவன் படைத்து விட்டு - மடிந்தானோ
    எம்மை தனியே விட்டு?

  7. இறைவா -
    நின் பயிற்சிக்கு எம் நன்றி!
    ஒடிந்து ஓய்தல் - அது பயிற்சி,
    இடிந்து சாய்தல் - அது பயிற்சி,
    மடிந்தது மாய்தல் - அது பயிற்சி!
    காத்திரு - இறைவா - பாத்திரு!
    விரைவில் விரைவில் எம் எழுச்சி!

  8. காத்திரு - இறைவா - பாத்திரு!
    புவி ஆயுள் எம் ஆயுள்!
    மடிவான் கடைசி மனிதன்
    அவன் தமிழன்!

5 comments:

கமலேஷ் said...

உணர்ச்சி பூர்வமான ஒரு கவிதை...

R said...

நன்றி கமலேஷ்!

Anonymous said...

superb:)

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு

வெற்றியடைய வாழ்த்துக்கள்

R said...

நன்றி Anonymous and Thenammailakshmanan..

Post a Comment