
(ஈழ தமிழர் போரின் போது எழுதப்பட்டது...)
பாண்டா கரடி குறையுது
காண்டா மிருகம் மாயுது
கூவும் கருணை கூட்டமே-
அழியும் இனம் அழிய விட்டு
அமைதியாய் இருப்பதேனோ?சாணக்கிய சூத்திரம்
சகுனியின் சாத்திரம்
கற்று தேர்ந்த கனவான்களே-
சாகும் வரை சாக விட்டு - சகுனம் பார்த்து
சாகும் வரை உண்ணாவிரதமா?இணக்கம் இல்லை என்றான் - நட்பு
சுணக்கம் ஆனது என்றான்-
இருந்தால் தானே இனம்
இழிக்குமென்றெண்ணினானோ, துரோகி?எம்மால் அரியணை ஏறி
எம்முன் ஆறுதல் கூறி - பின் சென்று
எம்மினம் அழிபீரோ?
ஒருவனுக்கு ஓரினம் சமமாமோ?கூரை தரையானது
தரை பிணவறையானது!
நிறுத்தி விட்டோம் போரென்று
புறப்பட்டு வருவோரே-
பிணம் தின்னி கழுகுகளோடு
பந்தியுண்டுச் செல்லுங்கள்!படைத்தவனை விட்டு
அடுத்தவனைச் சொல்லியெதற்கு?
படைத்தவன் படைத்து விட்டு - மடிந்தானோ
எம்மை தனியே விட்டு?இறைவா -
நின் பயிற்சிக்கு எம் நன்றி!
ஒடிந்து ஓய்தல் - அது பயிற்சி,
இடிந்து சாய்தல் - அது பயிற்சி,
மடிந்தது மாய்தல் - அது பயிற்சி!
காத்திரு - இறைவா - பாத்திரு!
விரைவில் விரைவில் எம் எழுச்சி!காத்திரு - இறைவா - பாத்திரு!
புவி ஆயுள் எம் ஆயுள்!
மடிவான் கடைசி மனிதன்
அவன் தமிழன்!